மெகா சாலைகள்

கடந்த 30 ஆண்டுகளில் சுற்றுலா மற்றும் புனித யாத்திரைகளை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, இந்த மலைப் பகுதிகளை தாறு மாறாக சிதைத்ததும் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம்.

“பிரயாகை பாலத்தின் ஓரத்தில் நின்றபடி, அந்த வழியாகப் போகும் வாகனங்களை ஒரு நாள் கவனித்தேன். ஏழு அல்லது எட்டு நிமிடங்களில் 117 பஸ்- லாரி – கார்கள் கடந்து சென்றன. இது எத்தனை கொடுமை… முன்பெல்லாம் ஒரு நாளைக்கு நூறு வாகனங்கள் கூட செல்லாமலிருந்த பகுதிகள் இவை. இவ்வளவு வாகனங்கள் வருவதற்காக உருவாக்கப்பட்ட சாலைகளுக்காக, எத்தனை மலைகளை சிதைத்திருப்பார்கள்… அதனால் இந்தப் பிரதேசத்தின் மண் பலமிழந்து, சரிந்து விழும் தருணத்துக்காக காத்திருந்தது என்பதுதான் நிஜம்,” என்கிறார் பண்டிட்.

இன்னொரு பக்கம் எந்த சட்டங்களையும் மதிக்காமல் மனிதர்கள் இயற்கையைச் சிதைத்ததும் அதற்கு அரசுகளே துணை போனதையும் யாராலும் மன்னிக்க முடியாது. இவர்களுக்கு இந்த தண்டனை தகும் என்பதுதான் பலரது கருத்தும். ஆற்றங்கரைகள் எனத் தெரிந்தும் மந்தாகினி, அலக்நந்தா, பாகீரதி போன்ற நதிக்கரைகளின் ஓரங்களில் பல நூறு பிரமாண்ட கட்டடங்களை கட்டி ஓட்டல், கடைகள் நடத்திய மனிதனின் பேராசையை அப்படியே மண்ணோடு மண்ணாக்கியுள்ளது இந்த இமயமலைச் சுனாமி.

இந்த இயற்கைச் சீற்றத்தில் 5000 உயிர்களுக்கு மேல் பலியாகியிருப்பது மனதை துணுக்குற வைக்கிறது. ஆனால், பெருமழைக் காலம் என்று தெரிந்தும், புனித யாத்திரை என்ற பெயரில் ஆபத்தான இந்த இடங்களுக்கு ஆயிரக்கணக்கில் பயணித்திருக்கிறார்கள். இதில் நமக்குத் தெரிந்தவர்கள்.. ஏன் நாமே கூட பாதிக்கப்பட்டிருந்தாலும், பழியை இயற்கை மீது போட்டுவிடுவதற்கில்லை.

Post a Comment

 
Top